வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ,வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சென்னை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். 2 நாட்களுக்கு பிறகு மழை குறையும் என கூறினார். மேலும் 28-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.


Popular posts
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
Image
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மக்களிடம் "பிராங்க்" செய்ய வேண்டும் என்பதற்காக செய்ததற்காகச் செய்த
காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்,
Image
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாஎதிரொலி கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது
Image