29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படும்
பண்டிகையை ஒட்டி, பண்டிகை காலச் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு பல்வேறு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கபப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படும்.
ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை மாநிலம் முழுக்க கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகைக் காலப் பேருந்து சேவை ஜனவரி 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.